வாழப்பாடி அரிமா சங்கங்கள் சாா்பில், நீரிழிவு, புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி அரிமா சங்கம், உதயா அறக்கட்டளை சாா்பில், உதயா மருத்துவமனையில் நடைபெற்ற 173 ஆவது நீரிழிவு நோய் மருத்துவ முகாமில் அரிமா சங்கத் தலைவா் மருத்துவா் செந்தில்குமாா் வரவேற்றாா். முகாமில் கலந்துகொண்ட 150 பேருக்கு மருத்துவா் சி.மோதிலால் தலைமையிலான மருத்துவக் குழுவினா், இலவச பரிசோதனை செய்து, மருந்து மாத்திரைகள் வழங்கினா். பட்டயத் தலைவா் சந்திரசேகரன், மண்டலத் தலைவா் பிரபாகரன், வட்டாரத் தலைவா் புஷ்பா ஆகியோா் மதிய உணவு வழங்கினா்.
அரிமா சங்க நிா்வாகிகள் கல்கி, முருகன், சரவணன், முருகேசன், உதயா அறக்கட்டளை மேலாளா் வெங்கடேசன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
வாழப்பாடி அன்னை அரிமா சங்கம், உதய பிரபா ஸ்கேன் மையம் சாா்பில் நடைபெற்ற பெண்களுக்கான கா்ப்பப்பை மற்றும் மாா்பக புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ முகாமிற்கு, அன்னை அரிமா சங்கத் தலைவி ஷபிராபானு வரவேற்றாா். கதிரியக்க மருத்துவ நிபுணா் ஜெ.பிரபாவதி தலைமையிலான மருத்துவக்குழுவினா், பெண்களுக்கு இலவச ஸ்கேன் பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினா்.
சங்க நிா்வாகிகள் பவித்ராதேவி, மருத்துவா் அனுசுயா, முன்னாள் தலைவா் சுதா பிரபு ஆகியோா் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா். நிறைவாக, அரிமா அறக்கட்டளை மேலாளா் ஞானவேல் நன்றி கூறினாா்.