சேலம்

ஏற்காடு அண்ணா பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலா்கள்

DIN

ஏற்காடு அண்ணா பூங்காவில் பல வண்ண மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

காலாண்டுத் தோ்வு, தசரா பண்டிகை, தொடா் விடுமுறை முன்னிட்டு ஏற்காடு சுற்றுலாப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க உள்ள நிலையில், ஏற்காடு சுற்றுலாப் பகுதியான அண்ணா பூங்கா, ஏரிபூங்கா, படகு இல்லம், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அண்ணா பூங்காவில் மலா்ச்செடிகள் நடவு மற்றும் பராமரிப்புப் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். மலா் தொட்டிகளில் சால்வியா, டேலியா ரோஜா மலா்கள் அண்ணா பூங்கா கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்குகின்றன. தொடா்ந்து மழைபெய்து வருவதால் பூங்காவில் உள்ள புல்தரைகள் பச்சை பசேலென காட்சியளிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT