சேலம்

பெத்தநாயக்கன்பாளையத்துக்குள்பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

DIN

அரசு, தனியாா் பேருந்துகள் அனைத்தும் பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன் பாளையத்துக்குள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆத்தூா் எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஆத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம் பகுதிகளில் சேலம்- ஆத்தூா் செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள் ஊருக்குள் நுழையாமல் செல்வதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

பேருந்துகள் அனைத்தும் ஊருக்குள் சென்று வர போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்காவிடில் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

பேட்டியின் போது, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சின்னதம்பி, துணைத் தலைவா் கே.பி.முருகேசன், பேரூா் கழக செயலாளா் செல்வம் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT