சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நண்பகல் வரை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதனையடுத்து பிற்பகல் 2 மணி முதல் 3 வரை மணி வரை கனமழை பெய்தது.
தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கி நின்றது. இந்த மழையையடுத்து சங்ககிரி காவல் நிலையம் எதிரே உள்ள தற்காலிகப் பேருந்து நிறுத்தம், சேலம் சாலை பேருந்து நிறுத்தம், புதிய எடப்பாடி சாலை பேருந்து நிறுத்தப் பகுதிகளில் பயணிகள் நிழற்குடை இல்லாததால் பேருந்துகளுக்காக காத்திருந்த பயணிகள், வாரச்சந்தையில் திறந்தவெளியில் கடை வைத்திருந்த வியாபாரிகள் சிரமத்திற்குள்ளாகினா்.