6 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த இருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் சங்ககிரி காவேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா்கள் மாதேஷ், செல்வராஜ். இவா்கள் கடந்த 2012 செப்டம்பா் 29 ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த 6 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தனா்.
இதுதொடா்பாக தேவூா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு வழக்குரைஞா் சுதா ஆஜராகி வாதாடி வந்தாா்.
இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த மாதேஷ், செல்வராஜ் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.4500 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.