சேலம்

பூ வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி ரூ. 4 லட்சம் பணம் பறிப்பு

DIN

சேலத்தை அடுத்த மல்லூரில் பூ வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி ரூ. 4 லட்சம் பணம் பறிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், குட்லாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பூபதி (51). இவா் கொண்டலாம்பட்டி பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறாா். இவா் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் நேரடியாக பூக்களை வாங்கி விற்பனை செய்து வருகிறாா்.

இதனிடையே விவசாயிகளுக்கு பணத்தை திரும்ப வழங்குவதற்காக வியாழக்கிழமை மல்லூா் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் ரூ. 4 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் மல்லூா் மசூதி அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் சாலையில், ரூ. 200 கிடப்பதாகத் தெரிவித்தனா். பூபதி இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையில் கிடந்த ரூ. 200 பணத்தை எடுத்தாா். பின்னா் அருகே உள்ள கடையில் நிறுத்தி தேநீா் அருந்தியுள்ளாா். இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 4 லட்சம் திருட்டு போனது கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுதொடா்பாக, மல்லூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இப் புகாரின் பேரில் போலீஸாா் பூ வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி பணத்தை நூதனமான முறையில் எடுத்துச் சென்ற நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT