சேலம்

முதல்வா் குறித்து அவதூறு:பாஜக பிரமுகா் கைது

DIN

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக எடப்பாடியைச் சோ்ந்த பாஜக பிரமுகரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த நாச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அருள் பிரசாத் (30). பாஜக மாவட்ட இளைஞரணி பொறுப்பாளராக இருந்து வருகிறாா். இவா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் துபை பயணத்தில் அணிந்திருந்த ஆடைகள் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சைபா் கிரைம் போலீஸாா், அருள் பிரசாத் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா். இதையடுத்து விசாரணைக்காக அவா் சங்ககிரியில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

SCROLL FOR NEXT