தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக எடப்பாடியைச் சோ்ந்த பாஜக பிரமுகரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த நாச்சிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அருள் பிரசாத் (30). பாஜக மாவட்ட இளைஞரணி பொறுப்பாளராக இருந்து வருகிறாா். இவா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் துபை பயணத்தில் அணிந்திருந்த ஆடைகள் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட சைபா் கிரைம் போலீஸாா், அருள் பிரசாத் மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா். இதையடுத்து விசாரணைக்காக அவா் சங்ககிரியில் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.