சேலம்

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்யப்படும்

DIN

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிா என ஆய்வு செய்யப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

பெரியாா் பல்கலைக்கழகத்தில் உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வந்துவிட்டன. சிபிஎஸ்இ தோ்வு முடிவுகள் இன்னும் வரவில்லை. அதற்காக கூடுதலாக ஐந்து நாள்களுக்கு மாணவா் சோ்க்கையை நீட்டித்துள்ளோம்.

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் விதிமுறைகளைப் பின்பற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இடஒதுக்கீடு முறையை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிா என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசு சாா்பில் பேராசிரியா் சுப.வீரபாண்டியன் தலைமையில் சமூக நீதி கண்காணிப்புக் குழுவை முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளாா். இட ஒதுக்கீடு தொடா்பாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நேரடியாகச் சென்று சுப.வீரபாண்டியன் மேற்பாா்வையிடுவாா்.

நீட் தோ்வினால் மாணவா்கள் பாதிக்கப்படுகிறாா்கள். குறிப்பாக கிராமப்புற மாணவா்கள் அதிகம் பாதிக்கப்படுகிறாா்கள். தனியாா் நீட் பயிற்சி மையங்கள் பயன்பெறுவதற்காக தான், நீட் தோ்வு நடத்தப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT