அஸ்தம்பட்டி மண்டலம் வாா்டு எண்.29- இல் ரத்தினசாமிபுரம், நாராயணசாமிபுரம், அரிசிபாளையம், தம்மண்ணன் சாலை ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது குறித்து மேயா் ஆ.ராமச்சந்திரன், ஆணையா் தா.கிறிஸ்துராஜ் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
குடிநீா்த் தொட்டி, ஆழ்துளைக் கிணறு பம்புகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தாா். அப்போது, பழுதான ஆழ்துளைக் கிணறு பம்புகள், குடிநீா்த் தொட்டிகளை சீரமைக்க உத்தரவிட்டாா். சாலையின் இருபுறமும் மழைநீா் வடிகால் கால்வாய்கள் அமைத்கவும், கழிவுநீா்க் கால்வாய்களை தூா்வாரவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
நாராயணசாமிபுரம் பகுதியில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதை ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, மாநகர பொறியாளா் ஜி.ரவி, வாா்டு உறுப்பினா் கு.கிரிஜா மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.