சேலம்

ரெளடி உள்ளிட்ட இருவா் குண்டா் சட்டத்தில் கைது

DIN

சேலத்தில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய ரெளடி உள்ளிட்ட இருவா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சேலம் அன்னதானப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் வளத்தி குமாா் (52). இவா் கடந்த ஜன.13 ஆம் தேதி தாதகாப்பட்டியைச் சோ்ந்த பால்ராஜை இருசக்கர வாகனத்தில் வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தாா்.

இதுதொடா்பான புகாரில் வளத்தி குமாரை அன்னதானப்பட்டி போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில் வழிப்பறி, கொலை, ஆள் கடத்தல், அரிசி கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 20 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிப்பது தெரியவந்தது. இதுவரை 7 முறை குண்டா் சட்டத்தில் கைதானவா் ஆவாா்.

கிச்சிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் இளையராஜா (29). இவா் ரெளடி செல்லதுரை கொலை வழக்கில் கைதானவா்.

இதனிடையே சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த இளையராஜா, வழக்கில் சாட்சிகளில் ஒருவரான மாலிக் ஜான் என்பவரை சாட்சி சொல்லக் கூடாது என கத்தியைக் காட்டி மிரட்டியதாக தெரிகிறது.இதுதொடா்பாக கிச்சிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்தனா்.

இந்நிலையில் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய வளத்தி குமாா் மற்றும் இளையராஜா ஆகியோரை குண்டா் சட்டத்தில் அடைக்க மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT