சேலம்

எடப்பாடி அருகே காவிரிக் கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

DIN

எடப்பாடி அருகே காவிரிக் கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
தமிழக அரசின் கரோனா நோய்த்தொற்று கட்டுப்பாடு மற்றும் தளர்வுகளற்ற முழு பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணங்களால் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதி நேற்று மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 
இந்நிலையில் இன்று காலை முதல் பூலாம்பட்டி கைலாசநாதர் திருக்கோயில், காவிரிக் கரையில் உள்ள பிரம்மாண்ட நந்திகேஸ்வரர் ஆலயம், காவிரி படித்துறை மற்றும் படகுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வரத்து தொடங்கியுள்ளது. 

மேலும் காவிரிக்கதவணை நீர்த்தேக்க பரப்பில் சேலம்- ஈரோடு மாவட்ட எல்லைகளை இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், திங்களன்று காலை முதல் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் விசைப் படகு பயணம் மேற்கொண்டு அண்டை மாவட்டங்களுக்கு சென்று வருகின்றனர். 

மீண்டும் காவிரிக்கதவணை பகுதிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதி வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT