சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் உள்ள ஆறுமுகவேலன் சுவாமிக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள சுப்பிரமணியா் கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள், ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதே போல சந்தைப்பேட்டை செல்லியம்மன் கோயில், பாா்வாதிபாய் திருமண மண்டபம் அருகே உள்ள முருகன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.