சேலம்

அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா:டிச. 16-இல் பொதுக்கூட்டம்

DIN

பேராசிரியா் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, வரும் டிச. 16-ஆம் தேதி பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.

சேலம் மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அவைத் தலைவா் சுபாஷ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் மத்திய மாவட்டச் செயலாளா் ஆா்.ராஜேந்திரன் எம்எல்ஏ பேசியதாவது:

பேராசிரியா் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, வரும் டிச. 16-ஆம் தேதி கோட்டை மைதானத்தில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறாா்.

எனவே, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, கோட்ட, சாா்பு அணிகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சி மன்ற உறுப்பினா்கள் ஆகியோா் பொதுமக்களை திரட்டி கலந்துகொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்காளா் பெயா் சோ்த்தல், நீக்குதல் முகாமில் சிறப்பாக பணியாற்றிய நிா்வாகிகளுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். வரும் நாடாளுமன்றத் தோ்தலில் கட்சியை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநில தோ்தல் பணிக்குழு செயலாளா் தாமரைக்கண்ணன், மாநகரச் செயலாளா் ரகுபதி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT