ஆத்தூா் பாரதியாா் ஹைடெக் இண்டா்நேஷனல் பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி, பள்ளியின் தலைவா் எஸ்.இளவரசு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஆத்தூா் தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் சா.அசோகன் தலைமையிலான வீரா்கள், பள்ளி மாணவ, மாணவியருக்கு தீத்தடுப்பு ஒத்திகை விழிப்புணா்வை ஏற்படுத்தினா் .