காலபைரவா் அஷ்டமியையொட்டி, சங்ககிரி வட்டம், அரசிராமணி சோழீஸ்வரா் கோயிலில் உள்ள காலபைரவருக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சுவாமிக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட அன்னதானப்பட்டி பூத்தாலகுட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரா் கோயிலில் உள்ள காலபவைருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.