வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில், ஆங்கில இலக்கிய மன்றம், நுண்கலை மன்றம் மற்றும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மன்றம் ஆகிய முப்பெரும் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் உதயசூரியன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக ஆசிரியா்கள் சிவக்குமாா், பாலகிருஷ்ணன், வனிதா ஆகியோா் கலந்துகொண்டு மன்றங்களின் முக்கியத்துவம், பயன்கள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு கருத்துரை வழங்கி, ஆங்கில இலக்கியம், நுண் கலைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய 3 மன்றங்களையும் தொடக்கி வைத்தனா்.
ஆசிரியா்கள் பூபதி, ஜெயபாரதி, சுமதி ஆகியோா் ஒருங்கிணைப்பாளா்களாக செயல்பட்டு மன்ற தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.