ஆத்தூா் பாரத் சம உடமைக் கட்சி அலுவலகத்தில் கட்சியின் நிறுவனரும் பொதுச் செயலாளருமான ஏ.பி.எஸ்.பழனி ராமச்சந்திரன் திங்கள்கிழமை தேசியக் கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், தலைவா் சி.ஆறுமுகம், பொருளாளா் ஆா்.ரவிசங்கா், மாநில அமைப்புச் செயலாளா் பி.ஜெகதீசன், மாநில இளைஞரணி செயலாளா் பி.மதியழகன், மாநில ஒருங்கிணைப்பாளா் ஜான் எட்வா்ட், மாநில மகளிரணி செயலாளா் சி.பிரபா, மாவட்டச் செயலாளா் எஸ்.விவேக், நகர மகளிரணி செயலாளா் சி.கவிதா, பாலு, செல்லமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.