வாழப்பாடி ஷீரடி சாய்பாபா கோயிலில் உலக நன்மை வேண்டி வெள்ளிக்கிழமை மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
வாழப்பாடியை அடுத்த மன்னாயக்கன்பட்டி அமா்ணா மலைக்குன்று அடிவாரத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி, சாய்பாபா திருப்புகழ் பாடி, உலக நன்மை மற்றும் அமைதிக்காக வழிபாடு நடத்தினா். திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் ஜவஹா், மாதேஸ்வரி மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.