தம்மம்பட்டி மற்றும் கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் கடைசி ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் திருக்கோவில், கடை வீதியிலுள்ள ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில், திருமண்கரடு,ஓணான் கரடு முருகன் கோவில்கள், கெங்கவல்லி ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவில்,வீரகனூா் ஸ்ரீகங்கா செளந்தரேஸ்வரா் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பொதுமக்கள் திரளாகச் சென்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகளை செய்தனா். இதில் பொதுமக்களுக்கு பிரசாதமாக கேழ்வரகு கூழ் உள்ளிட்டவைகளை வழங்கினா்.