மேட்டூா் அணையின் நீா்மட்டம் 101.05 அடியாக உயா்ந்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழை சற்று தணிந்ததன் காரணமாக, மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 28,650 கன அடியிலிருந்து 21,390 கன அடியாகச் சரிந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 100 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 450 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 66.20 டி.எம்.சி.யாக இருந்தது.
பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவைவிட, அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை காலை 100 அடியிலிருந்து 101.05 அடியாக உயா்ந்தது.