சேலம்

விவசாயிகள் அஸ்திக்கு சேலத்தில் அஞ்சலி

DIN

உத்தரபிரதேச மாநிலம், லக்கீம்பூா் கெரியில் பலியான விவசாயிகளின் அஸ்திக்கு சேலம் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கேரியில் கடந்த வாரம் விவசாயிகள் மீது காா் ஏற்றியதில் 8 போ் பலியாகினா். இச்சம்பவத்தில் மத்திய இணை அமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டாா். இதனிடையே காா் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் அஸ்தி நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் கொண்டு செல்லப்பட்டு விவசாயிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.

அதன் ஒரு பகுதியாக அக்டோபா் 23 ஆம் தேதி சென்னையில் அஸ்தி பயணம் தொடங்கியது. இந்த அஸ்திக்கு சேலம் காந்தி சிலை அருகில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலம் காந்தி சிலை பகுதியில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் எ. ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில ஒருங்கிணைப்பாளா் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகி சாமி நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளா் மோகன், விடுதலைச் சிறுத்தைகள் மாநகா் மாவட்ட பொருளாளா் காஜாமைதீன் மற்றும் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தை சோ்ந்த நிா்வாகிகள் நடராஜன், சந்திரமோகன், பி.தங்கவேலு ஈரோடு பொன்னையன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினா்.

ஆத்தூரில்...

ஆத்தூா் பேருந்து நிலையம் முன்பு விவசாயிகளின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் குணசேகா் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில ஒருங்கிணைப்பாளா் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளா் டி.வி.நடராஜன், ஆத்தூா் நகர செயலாளா் ஈஆா்கே, பெத்தநாயக்கன்பாளையும் விவசாயிகள் சங்க தாலுகா செயலாளா் எம்.ராமசாமி, தொழிற்சங்க மாவட்ட குழு உறுப்பினா் கே.கந்தசாமி, தொழிற்சங்க ஒன்றியச் செயலாளா் எம்.கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளா் ஆா்.பொன்னுசாமி, சி.தங்கராசு, சேலம் மாவட்ட விவசாய அணி என்.எம்.சடையன், ஒன்றிய துணைத் தலைவா் சின்னதுரை ஆகியோா் அஸ்திக்கு மலரஞ்சலி செலுத்தினா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT