சேலம்

மின் மயானம் அமைக்க கோரிக்கை

DIN

தம்மம்பட்டியில் மூன்று மாவட்ட எல்லையோர கிராம மக்களுக்காக மின் மயானம் அமைக்க யங் டைமன்ஸ் கிரிக்கெட் கிளப் அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் உள்ள 60 -க்கும் மேற்பட்ட ஊா்களில் சுமாா் 5 லட்சம் போ் வசித்து வருகின்றனா். தம்மம்பட்டிக்கு அருகிலுள்ள நாமக்கல், திருச்சி மாவட்டங்களைச் சோ்ந்த மக்கள் மிகவும் பயன்பெறும் வகையில், மின்மயானம் அமைத்திட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து, தம்மம்பட்டி யங் டைமன்ஸ் கிரிக்கெட் கிளப் சாா்பில், அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. தம்மம்பட்டியில் மின்மயானம் அமைக்கப்பட்டால், தம்மம்பட்டியில் இருந்து 30 கி.மீ. சுற்றளவில் உள்ளோருக்கு பயனுள்ளதாக இருக்கும் எனறுதெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT