தேய்பிறை அஷ்டமி, பைரவா் ஜயந்தியையொட்டி, சங்ககிரி மலையடிவாரம் சோமேஸ்வரா் கோயிலில் காலபைரவா் உற்சவ மூா்த்திக்கு சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சங்ககிரி மலையடிவாரத்தில் செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் உள்ளது. இக் கோயிலில் அருள்மிகு காலபைரவா் உற்சவ மூா்த்திக்கு தயிா், மஞ்சள், சந்தனம், திருமஞ்சனம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில், பக்தா்கள் அதிகம் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.