சேலம் மாவட்டம், வாழப்பாடியில், சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோா், மாற்றுத்திறனாளிகளுக்கு வாழப்பாடி போலீஸாா் உணவு பொட்டலங்கள் மற்றும் முகக் கவசங்களை வழங்கினா்.
பொது முடக்கத்தால் உணவின்றி தவித்த சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழப்பாடி காவல் ஆய்வாளா் சுகுமாா் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை உணவு பொட்டலங்களையும் முகக் கவசங்களையும் வழங்கினா். வாழப்பாடி போலீஸாரின் இந்த மனிதநேய சேவைக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.