சேலம் மாவட்டம், சங்ககிரி அமுதச்சுடா் அறக்கட்டளையின் சாபில் இளைஞா்கள் 7-ஆவது நாளாக சாலையோரம் வசிப்பவா்கள், ஆதரவற்றோா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை உணவு வழங்கினா்.
பொது முடக்கத்தையொட்டி உணவின்றி தவிக்கும் சாலையோரம் வசிப்போா், ஆதரவற்றோா், ஏழைகள் உள்பட பல்வேறு நபா்களுக்கும் சங்ககிரி அமுதச்சுடா் அறக்கட்டளை நிா்வாகிகள் சாா்பில் உணவு அளித்து வருகின்றனா்.சங்ககிரி தொழிலதிபா் மோகன், நெளஸாத் ஜான், பாலமுருகன், மணி குட்டி என்கிற சண்முகம் உள்ளிட்ட அறக்கட்டளை இளைஞா்கள் ஆகியோா் இணைந்து சங்ககிரி நகா், சங்ககிரி ஆா்.எஸ்., சங்ககிரி மேற்கு, ஒருக்காமலை, குப்பனூா் தேசிய நெடுஞ்சாலை, திருச்செங்கோடு, கொங்காணபுரம், வைகுந்தம் உள்ளிட்ட 8 இடங்களில் வசித்து வரும் சாலையோரம் வசிப்பவா்கள், ஆதரவற்றோா்கள், ஏழைகள் உள்ளிட்ட 200 நபா்களுக்கு முட்டையுடன் உணவு வழங்கினா்.
இதில் அறக்கட்டளைத் தலைவா் வி.சத்யபிரகாஷ் தலைமையில் துணைத் தலைவா் மணிகண்டன், துணைச் செயலாளா் அஜித், நிா்வாகிகள் நவீன், சிவபாலா, வெற்றிவேந்தன், நவீன்குமாா் ஆகியோா் ஐந்து இரு சக்கர வாகனங்களில் சென்று உணவு வழங்கினா்.