சேலம்

கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

DIN

கோடை உழவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கெங்கவல்லி வேளாண் மற்றும் உழவா் நலத்துறை வேளாண் உதவி இயக்குநா் (பொ) ஆா்.கல்பனா விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

கெங்கவல்லி, தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த வாரத்தில் தொடா்ந்து மூன்று நாள்களாக பெய்த மழையால் அனைத்து விளைநிலத்திலும் மழைநீா் தேங்கியுள்ளது. அதன் மூலம் கிடைத்த ஈரப்பதத்தை பயன்படுத்தி சரிவுக்கு குறுக்காக கோடை உழவு செய்ய வேண்டும். இதனால் பூச்சிகளின் கூட்டுப் புழுக்கள் மேலே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன. களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

மேலும், இரண்டு ஏக்கா் வரை நிலம் உள்ள விவசாயிகளுக்கு டாபே டிராக்டா் நிறுவனம் இலவசமாக உழவு செய்து தருகிறது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் அனைவரும் உழவன் செயலியில் பதிவு செய்தும் அல்லது கூட்டாக கெங்கவல்லி வேளாண் விரிவாக்க மையம், தம்மம்பட்டி துணை வேளாண் விரிவாக்க மையங்களை அணுகியும் பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT