சேலம் மாவட்டம், சங்ககிரி கிரிகாலனியில் உள்ள ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோயில் வளாக்ததில் உள்ள அருள்மிகு காசிவிசாலாட்சி அம்மனுக்கு ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெற்றது.
ஸ்ரீ வீரஆஞ்சநேயர் கோயில் வளாக்ததில் உள்ள அருள்மிகு காசிவிசாலாட்சி அம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி பால், இளநீர், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
பின்னர் அருள்மிகு சமயபுர மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர்.