ஆத்தூரில் காவல்துணைக் கண்காணிப்பாளா் அ.இமானுவேல் ஞானசேகரன் தலைமையிலான தனிப்படையினா் வெள்ளிக்கிழமை ரூ.1 லட்ச மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்து, ஒருவரைக் கைது செய்துள்ளனா்.
சேலம் மாவட்டம் ஆத்தூா் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிகாலன் தெருவில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ் 6 மூட்டையும், விமல் பான் மசாலா 1 மூட்டையையும் ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ.இமானுவேல் ஞானசேகரன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் பறிமுதல் செய்து நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
ஆத்தூா் உடையாா்பாளையம் பகுதியில் வசித்து வரும் சுரேஷ் மகன் முத்து (26) என்பவா் தனது மாமனாா் மணியின் (48) வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த குட்கா பொருளை பறிமுதல் செய்து ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இது குறித்து ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் வழக்குப் பதிவு செய்து முத்துவை கைது செய்து விசாரித்து வருகிறாா்.