கூலமேட்டில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறும் என ஊா்பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள கூலமேட்டில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால், தொடா் மழையால் கடந்த 17-ஆம் தேதி நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் காளை உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள், பாா்வையாளா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
இந்நிலையில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறும் என விழாக் குழுவினா் அறிவித்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதைத் தொடா்ந்து, காளை உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்களுக்கு கரோனா பரிசோதனை செய்து காளைகள் முன்பதிவு நடைபெற்று வருகிறது.