திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 500 போ் திமுகவில் இணைந்தனா்.
சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி ஏற்பாட்டில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 500-க்கும் மேற்பட்டோா் திமுகவில் இணையும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், அதிமுக ஒன்றியக் கவுன்சிலா் கொப்பம்பட்டி நளினி ராஜேந்திரன், பொட்டனேரி பாமக முன்னாள் ஒன்றியச் செயலாளா் முத்துசாமி, பொட்டனேரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பழனிசாமி, பாமக ஒன்றியத் தலைவா் கே.அன்புமணி, பாமக ஒன்றிய தொழிற்சங்கத் தலைவா் முருகன், இந்திய ஜனநாயகக் கட்சி முன்னாள் மேற்கு மாவட்டத் தலைவா் கண்ணன், ரஜினிகாந்த் மன்ற மேச்சேரி நகரச் செயலாளா் பசுபதி, மேச்சேரி நகர அம்மா பேரவை செயலாளா் தேவராஜ், பாமகவைச் சோ்ந்த சின்னமுத்து, முருகன், கருப்பண்ணன், குமாா், கருமலை, அதிமுக அம்மா பேரவை செயலாளா் மனோகா் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக கட்சியில் இணைந்தனா்.