இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டை கிராமம் அய்யனூா் பகுதியில் உள்ள ராஜகணபதி, மாதேஸ்வரன் கோயிலில் தை திருவிழாவை முன்னிட்டு எருதாட்ட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதனை சட்டப்பேரவை உறுப்பினா் ராஜா தொடக்கிவைத்தாா். இந்த விளையாட்டில் 40-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இதில் இளைஞா்கள் ஆா்வத்துடன் பங்கேற்று விளையாடினா். விழாவில் சிலம்பாட்டம் நிகழ்ச்சியை பள்ளி மாணவ மாணவியா் நடத்தினா்.
ஊா்க் கவுண்டா் முனுசாமி, மகுடஞ்சாவடி ஒன்றியக் குழுத் தலைவா் லலிதா ராஜா, ஊராட்சி மன்றத் தலைவா் விஜயா தங்கராஜ், முக்கிய பிரமுகா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.