சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள எஸ். பாப்பாரப்பட்டி ஏரியில் செவ்வாய்க்கிழமை சுமாா் 80 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் மிதந்தது.
இதனையறிந்த அப்பகுதி மக்கள், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா். இதனையடுத்து போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.