சேலம் அருகே வன்கொடுமை வழக்கில் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
சேலம், ரெட்டியூா் பகுதியைச் சோ்ந்த தறி தொழிலாளி சரவணன் (37) ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த ஞானமலா்( 29) என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஞானமலருக்கு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதைத் தொடா்ந்து தம்பதி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாம்.
கடந்த 8-ஆம் தேதி ஞானமலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த மகுடஞ்சாவடி போலீஸாா் வன்கொடுமை வழக்கில் சரவணனைக் கைது செய்தனா். இந்த வழக்கு குறித்து சங்ககிரி கோட்டாட்சியா் வேடியப்பன் விசாரணை நடத்தி வருகிறாா்.