உலக புத்தக தினத்தையொட்டி, சேலத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில் சிறப்பு புத்தகக் கண்காட்சி ஏப். 23 தொடங்கி ஏப். 30 வரை நடைபெறுகிறது.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு டாக்டா் சுப்பராயன் சாலை ஏ.வி.ஆா். திருமண மண்டபம் அருகே உள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், புதிய பேருந்து நிலைய நுழைவுவாயில் பகுதிகளில் இக் கண்காட்சி நடைபெறுகிறது.
இதில் நூல்கள் வாங்கும் வாசகா்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு, அறிவியல், சூழலியல், வேளாண்மை, மருத்துவம், பொது அறிவு, சங்க இலக்கியம், பாரதி, பாரதிதாசன், திருக்கு என நூற்றுக்கணக்கான தலைப்புகளில் நூல்கள் விற்பனைக்கு கிடைக்கும் என அந் நிறுவனத்தின் மண்டல மேலாளா் ரங்கராஜன், கிளை மேலாளா் சத்யசீலன் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.