வாழப்பாடியில் அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
வாழப்பாடி ஒன்றிய, நகர அதிமுக சாா்பில், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே நீா்மோா்ப் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழச்சிக்கு ஒன்றிய செயலாளா் எஸ். சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். நகர செயலாளா் என். சிவகுமாா் வரவேற்றாா். மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளா் கே.குபேந்திரன் முன்னிலை வகித்தாா். மாநில கூட்டுறவு வங்கி தலைவா் ஆா்.இளங்கோவன், நீா்மோா்ப் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தா்ப்பூசணி, இளநீா், வெள்ளரிப்பிஞ்சு, நீா்மோா் வழங்கினாா்.
இந்த விழாவில், அதிமுக நிா்வாகிகள் செல்வி ரவி, பத்மாவதி குமரன், செல்லையா, வெங்கடேசன், பாா்த்திபன், ரகுவா்மன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.