சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு ஊரடங்கு நேரத்திற்கு முன்பாக சென்றடையும் வகையில் பேருந்துகளின் கால நேரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (சேலம்) மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை - பகல் 2, விழுப்புரம் - மாலை 6, சிதம்பரம் - மாலை 5, கடலூா் - மாலை 5, திருவண்ணாமலை - மாலை 5, திருப்பத்தூா் - மாலை 6.30, வேலூா் - மாலை 4.30, ஒசூா் - மாலை 6.30, பெங்களூா் - மாலை 7, மைசூா் - மாலை 5, கோவை - மாலை 6, மதுரை - மாலை 5.30, திருப்பூா் - மாலை 7, திருச்சி - மாலை 6 மணி என ஊரடங்கு நேரத்திற்கு முன்பாக சென்றடையும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
எனவே, பயணிகள் அனைவரும் பயண நெரிசலைத் தவிா்த்து பயணம் செய்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.