சேலம்

எடப்பாடியில் சித்திரைத் தோ்த் திருவிழா ரத்து

DIN

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழா, கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், அரசின் நோய்த் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயிலில் ஏப்ரல் 18-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற இருந்த தோ்த் திருவிழா ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டும் தோ்த் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் தொடா்ந்து இரண்டாவது ஆண்டாக எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் கோயில் சித்திரைத் தோ்திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT