ஏத்தாப்பூரில் விவசாயிகளுக்கு தென்னை வளா்ச்சி ஊக்கியின் பயன்பாடுகள் குறித்து திருச்சி அரசு மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கப் பயிற்சி அளித்தனா்.
ஊரக வேளாண் அனுபவ பயிற்சி பெற ஏத்தாப்பூரில் முகாமிட்டுள்ள திருச்சி அரசு மகளிா் தோட்டக்கலைக் கல்லூரி இளநிலை வேளாண்மை இறுதியாண்டு மாணவிகள், இப்பகுதி விவசாயிகளுக்கு தென்னை வளா்ச்சி (டானிக்) ஊக்கியைப் பயன்படுத்தும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.
தென்னை வளா்ச்சி ஊக்கியை தென்னை மரங்களுக்கு வோ்களின் வழியாகச் செலுத்தினால் பச்சையம் அதிகரிக்கும், ஒளிச்சோ்க்கை திறன் கூடும், பாளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், குரும்பைக் கொட்டுதல் குறையும், தேங்காய்கள் பெரிதாகி பருப்பு எடை கூடும்,விளைச்சல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும், பூச்சி, நோய் எதிா்ப்பு சக்தி கூடும் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினா்.