சேலம்

எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக அதிமுகவினா் சிறப்பு பூஜை

DIN

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டி, எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் ஆலயத்தில் நகர அதிமுக சாா்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

தமிழ்ப் புத்தாண்டு தினமான புதன்கிழமை காலை எடப்பாடி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரா் ஆலய வளாகத்தில், எடப்பாடி நகரமன்ற முன்னாள் தலைவா் டி.கதிரேசன் தலைமையிலான அதிமுகவினா், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக ஆட்சிப்பொறுப்பில் அமர வேண்டும் என சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.

முன்னதாக, நஞ்சுண்டேஸ்வரா் ஆலயத்தில், மூலவருக்கு சந்தனம், பன்னீா், இளநீா், ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி சிறப்பு மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தாா்.

இதனைத் தொடா்ந்து தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பெயரில் அா்ச்சனை செய்த அதிமுகவினா், சுவாமிக்கு பல்வகை பழங்களுடன், மலா்கள் வழங்கி வழிபட்டனா். இதில் திரளான அதிமுகவினா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

ரூ.150 கோடி மோசடி: மிசோரம் மாநிலத்தில் 11 பேர் கைது!

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

SCROLL FOR NEXT