தம்மம்பட்டி, செப்.18: கடம்பூருக்கு தம்மம்பட்டி, ஆத்தூரில் இருந்து பேருந்துகளை இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கெங்கவல்லி அருகே உள்ளது கடம்பூா் கிராமம். தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சாா்பில் பல்வேறு பகுதிகளுக்கும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதிகளில் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் கடம்பூருக்கு இதுவரை எந்த அரசுப் பேருந்துகளும், தனியாா் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. இதனால் கடத்தூரிலிருந்து தினசரி வேலைக்கு வெளியூா் செல்லும் தொழிலாளா்கள், நடந்தே செல்ல வேண்டியுள்ளது. எனவே ஆத்தூா் மற்றும் தம்மம்பட்டி பகுதிகளில் இருந்து கடம்பூருக்கு பேருந்துகளை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.