சேலம்

சங்ககிரி: ஈஸ்வரன் கோயில்களில் சுவாமிகளுக்கு அன்னாபிஷேகம், சிறப்பு பூஜைகள்

DIN

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பௌணர்மியையொட்டி சோமேஸ்வரர்சுவாமிக்கு சனிக்கிழமை மாலை அன்னாபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்றன. 

அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பௌணர்மியையொட்டி  சோமேஸ்வரர் சுவாமிக்கு சனிக்கிழமை  மாலை அன்னாபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் கோயில் அர்ச்சகர் சுவாமி மீது சாத்தப்பட்டிருந்த சாதத்தை எடுத்து கோயில் அருகில் உள்ள குளத்தில் விட்டார். பின்னர் சுவாமிக்கு பால், தயிர், திருநீறு, சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  இதில் அதிகமான பக்தர்கள் சுவாமியை வணங்கிச் சென்றனர்.  

பூத்தாழீஸ்வரருக்கு சிறப்பு பூஜை 

சங்ககிரி அருகே உள்ள அன்னதானப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பூத்தாலக்குட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு பூத்தாழீஸ்வரர் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி சுவாமிக்கு பால், தயிர், திருநீறு, சந்தனம், திருமஞ்சனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

அதனையடுத்து சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு  பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT