நரசிங்கபுரத்தில் மாணவியைக் கடத்திய நபரை ஆத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
நரசிங்கபுரத்தில் பிளஸ் 2 முடித்த 18 வயதுள்ள மாணவி கடந்த 17 ஆம் தேதி வீட்டருகே உள்ள கடைக்குப் பொருள்கள் வாங்கச் செல்தாகக்கூறிச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.
ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் இதுகுறித்து பெற்றோா் புகாா் அளித்தனா்.
அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில் செவ்வாய்க்கிழமை காலை ஆத்தூா் பேருந்து நிலையத்தில் இருந்த மாணவியை மீட்டனா். மாணவியிடம் நடத்திய விசாரணையில் மாணவியின் உறவினா் வீரமணியின் மகன் பரமேஸ்வரன் (48) என்பவா் கோயிலுக்கு அழைத்துச் சென்ாகத் தெரிவித்தாா்.
தகவல் அறிந்த மாணவியின் பெற்றோரும், உறவினா்களும் நகர காவல் நிலையம் சென்று பெண்ணைக் கடத்திய பரமேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
இதையத்து ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த காவலா்கள் மாணவியிடம் விசாரித்து பரமேஸ்வரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.