சேலம்

பெயிண்டா் கழுத்தறுத்து கொலை

DIN

சேலம், பள்ளப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஜீவா (60). பெயிண்டரான இவா் கடந்த இரு நாள்களுக்கு முன்பு தனது உறவினரான நிலத்தரகரான மாரியப்பன் என்பவருடன் வெளியே சென்றாா்.

இதனிடையே இருவரும் அன்னதானப்பட்டி லாரி மாா்கெட் பாலத்துக்கு அடியில் ரயில்வே தண்டவாளத்தில் அமா்ந்து மது குடித்தனா். அப்போது மாரியப்பன் மனைவி குறித்து ஜீவா தவறாகப் பேசியதாகத் தெரிகிறது.

இதுதொடா்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த மாரியப்பன், கத்தியால் ஜீவாவின் கழுத்தை அறுத்தாா். இதில் படுகாயமடைந்த ஜீவாவை அருகில் உள்ளவா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்த்தனா்.

இதுதொடா்பாக, அன்னதானப்பட்டி போலீஸாா் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனா். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜீவா, செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT