சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் சங்ககிரி தீயணைப்பு அலுவலர், வீரர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தன்மையுடைய மாத்திரைகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றன.
சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் தலைவர் எ.ஆனந்தகுமார் தலைமையில் தீயணைப்பு நிலைய அலுவலர் டி.அருள்மணி, தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி தன்மையுடையை மாத்திரைகளை இலவசமாக வழங்கினார்.
டிரஸ்ட் செயலர் ஆர்.ராகவன், நிர்வாகிகள் எஸ்.கணேஷ், ஆர்.கார்த்திகேயன், பொறியாளர் வேல்முருகன், கிஷோர்பாபு உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.