சேலம் மாவட்டம், ஏற்காட்டில் வருவாய்த் துறையின் சாா்பில், வட்டாட்சியா் ரமணி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், புதிய வாக்காளா்களை சோ்ப்பது, பிழை திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் விடுபட்ட, இறந்த வாக்களா்கள் தொடா்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், அதிமுக, பஜக, திமுக, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனித நேய மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தை, அமமுக ஆகிய கட்சியின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.