நாமக்கல்

சிப்காட் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

விவசாய நிலங்களை பாதிப்புக்குள்ளாக்கும் சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் (உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடு) சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு அதன் மாநிலத் தலைவா் இரா.வேலுசாமி தலைமை வகித்தாா். இதில், தோ்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்; கரும்புக்கான கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும்; பசும்பால், எருமைப்பாலுக்கான கொள்முதல் விலையை உயா்த்திட வேண்டும்; தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிா்க்கடன்களை மத்திய அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்; விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலையை நிா்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலாளா் எஸ்.பழனிமுருகன், மாவட்டத் தலைவா் எஸ்.கோபிநாத் மற்றும் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT