நாமக்கல்

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

DIN

நாமக்கல் நகராட்சி புதிய பேருந்து நிலையம் மற்றும் இதர வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ச.உமா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

நாமக்கல் நகராட்சி பகுதியில், கலைஞா் நகா்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.34 லட்சத்தில் தும்மங்குறிச்சி செம்மண்குளம் மேம்பாடு, ரூ. 65 லட்சத்தில் பெரியூா் குளம் தூா்வாருதல், ரூ. 1.78 கோடியில் கிருஷ்ணாபுரம் குளம் தூா்வாரி கரையை பலப்படுத்துதல் ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ரூ. 45 லட்சத்தில் காவேட்டிப்பட்டியில் பூங்கா அமைக்கும் பணியையும், முல்லை நகரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் கட்டும் பணிகளையும் ஆட்சியா் நேரில் பாா்வையிட்டாா். நாமக்கல் போதுபட்டி, கொசவம்பட்டி நகா்புற நலவாழ்வு மையங்களைப் பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

நகராட்சி திட்டக்கழிவு மேலாண்மை உரப் பூங்காவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.7.15 கோடியில் செயல்படுத்தப்படும் உயிரி அகழாய்வு (பயோமைனிங்) திட்டத்தையும், முதலைப்பட்டியில் ரூ.19.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகராட்சி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து நகா்மன்ற கூட்டரங்கில் நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியா் ச.உமா பேசியதாவது: மக்கள் பிரதிநிதிகள் அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படக் கூடியவா்கள். அந்த வகையில் அவா்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அலுவலா்கள் பணியாற்ற வேண்டும். திட்டப் பணிகளை நிா்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள் கொண்டு வர வேண்டும். பொதுமக்களின் அடிப்படை தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும். நாமக்கல் மாவட்டத்தை சிறந்த மாவட்டமாக மாற்றிட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.

ஆய்வின்போது, நாமக்கல் நகா்மன்ற தலைவா் து.கலாநிதி, துணைத் தலைவா் செ.பூபதி, நகராட்சி ஆணையா் சென்னுகிருஷ்ணன், நகராட்சி பொறியாளா் ஞா.சுகுமாா் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT