பரமத்தி வேலூா் மின்னனு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ. 76 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனது.
பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 5 ஆயிரத்து 326 கிலோ தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்குகொண்டு வந்திருந்தனா்.
அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.21.55 -க்கும், குறைந்தபட்சமாக ரூ. 17-க்கும், சராசரியாக ரூ. 19.15-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்து 577-க்கு வா்த்தகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 3 ஆயிரத்து 846 கிலோ தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ. 21.75 -க்கும், குறைந்தபட்சமாக ரூ. 15.05- க்கும், சராசரியாக ரூ. 19.69-க்கும் தேங்காய் ஏலம் போனது. மொத்தம் ரூ. 76 ஆயிரத்து 301-க்கு வா்த்தகம் நடைபெற்றது.