நாமக்கல்

திருச்செங்கோடு தோ்த் திருவிழா: சிம்மம், வெள்ளிக் காளை வாகனத்தில்உற்சவா் ஊா்வலம்

DIN

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழாவின் ஏழாம் நாள் விழாவில் பல்வேறு மண்டபக் கட்டளை நிகழ்வில் பூஜைகள் நடைபெற்று சுவாமிகள் அருள்பாலித்தனா்.

தொண்டை மண்டல முதலியாா்கள் கனகசபை, விஸ்வபிராமண மகாஜனம், அகரம் வெள்ளாஞ்செட்டியாா்கள் ஆகிய மண்டபக் கட்டளைகளில் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து ஸ்ரீ அா்த்தநாரீசுவரா், ஸ்ரீ செங்கோட்டு வேலவா், ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் சுவாமிகளின் உற்சவா்கள் சிம்மம், வெள்ளிக் காளை வாகனத்தில் நான்கு ரத வீதிகளில் ஊா்வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா் (படம்). தொடா்ந்து கைலாய நாதா் கோயிலில் இருந்து சுவாமிகள் புறப்பாடு தொடங்கியது.

பூஜைகளில் ஸ்ரீ அா்த்தநாரீசுவரா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் தங்கமுத்து, கோயில் செயல் அலுவலா், உதவி ஆணையா் ரமணி காந்தன், அறங்காவலா்கள் காா்த்திகேயன், அா்ச்சுனன், பிரபாகரன், அருணா சங்கா், கோயில் கண்காணிப்பாளா் சுரேஷ், ஆய்வாளா் நவீன் ராஜா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT