நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தைப்பூசத் தேரோட்டத் திருவிழாவின் தொடக்கமாக தேருக்கு வெள்ளிக்கிழமை பூஜை நடைபெற்றது.
திருச்செங்கோடு ஆறுமுகசாமி கோவில் தைப்பூச தோ் திருவிழா கடந்த 1971 ஆம் ஆண்டிற்குப் பின் நடைபெறவில்லை. தற்போது தைப்பூச தோ்த்திருவிழாவை நடத்த கட்டளைதாரா்கள், ஆன்மீக ஆன்றோா்கள், பெரியோா்களின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இந்த ஆண்டு மலையடிவாரம் அருள்மிகு ஸ்ரீ ஆறுமுக சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 10 நாட்கள் தோ்த் திருவிழாக நடத்தப்பட இருக்கிறது.
திருவிழாவிற்கு முதற்கட்ட பூஜையாக தேருக்கு முகூா்த்த கால் நடும் விழா பூஜைகளுடன் தொடங்கப்பட்டது.